இலங்கை

பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும்!

மீண்டுமொரு பொருளாதார நெருக்கடிக்கான கதவுகளைத் திறந்து விடாத வகையில் கடுமையான கண்காணிப்பின் பின்னர் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “நாங்கள் 3,000 க்கும் மேற்பட்ட HS குறியீடுகளை நிறுத்த வேண்டியிருந்தது. இதனை நிறுத்துவதன் மூலம், நாங்கள் இருப்புகளைப் பாதுகாத்தோம்.

ஒரு நாடு நீண்ட காலத்திற்கு இறக்குமதியைத் தடை செய்ய முடியாது. இப்போது வளமான பொருளாதாரத்தில் கவனம் செலுத்தி, வளமான பொருளாதாரத்தில் நாட்டின் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவது, சர்வதேச வர்த்தகத்திற்கு தேவையான வசதிகளை வழங்குவது மிக முக்கியமானது.

மாற்றுமுறைகள் போன்ற அனைத்து அம்சங்களையும் பார்த்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!