ஆயுதப்படையினரை களமிறக்க ஜனாதிபதி திட்டம்!

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (8.08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுத்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
(Visited 14 times, 1 visits today)