இலங்கை செய்தி

பாதுகாப்பு உறவுகளை மேலும் வளர்க்க அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணக்கம்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு போல் ஸ்டீபன்ஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் அவர்கள் இன்று (மார்ச் 28) கொழும்பு 07, வித்யா மாவத்தையில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் வைத்து மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார்.

கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் இயன் கெய்ன் அவர்களுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிக்கு வருகை தந்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரை இராஜாங்க அமைச்சர் தென்னகோன் வரவேற்றார்.

இந்த சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இரு உயர் அதிகாரிகளும் சுமுகமாக கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கு நினைவு சின்னம் வழங்கினார்.

பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (பாதுகாப்பு) ஹர்ஷ விதானராச்சி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

(Visited 14 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை