வட அமெரிக்கா

கனடாவில் காட்டுத்தீயை அணைக்க சென்ற விமானிக்கு நேர்ந்த துயரம்

கனடாவின் மேற்குப் பகுதியில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் பயணித்த விமானி உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினத்திலிருந்து அந்த ஹெலிகாப்டரைக் காணவில்லை என்று கூறப்பட்டது. ஆல்பர்டா மாநிலத்தின் Haig ஏரிக்கு அருகில் விமானம் விபத்துக்குள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

தீயணைப்புப் பணிகளின்போது அது நிலத்தில் மோதியதாகத் தெரிகிறது. அது குறித்து விசாரிக்கப்படுகிறது. ஹெலிகொப்டரில் 41 வயது விமானி மட்டுமே இருந்தார்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார். விமானி நாட்டிற்கு ஆற்றிய சேவையை ஒருபோதும் மறக்கப்போவதில்லை என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ கூறினார்.

காட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணிகளின்போது உயிரிழந்த 3ஆவது நபர் அந்த விமானியாகும். கடந்த வாரம் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!