ஐரோப்பா

கருங்கடல் பகுதியில் கொடூர தாக்குதல் நடத்திய ரஷ்யா – 60,000 டன் தானியங்கள் சேதம்

 

உக்ரேனின் கருங்கடல் பகுதியில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலில் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலினால் சுமார் 60,000 டன் தானியங்கள் சேதமடைந்துள்ளன. அவை ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த தானியங்கள் என்று கீவ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக உணவுப் பாதுகாப்புக்கு மீண்டும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். தாக்குதலைத் தொடர்ந்து, கோதுமையின் விலை கிட்டத்தட்ட 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

கருங்கடலில் உக்ரேன் தானியங்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வகைசெய்யும் ஓராண்டு உடன்பாட்டை ரஷ்யா முடிவுக்குக் கொண்டுவந்தது. அதனைத் தொடர்ந்து Odesa வட்டாரம் தாக்கப்பட்டது. அங்குள்ள மூன்று துறைமுகங்கள் உக்ரேனுக்காகச் செயல்பட்டுவந்தன.

இனிமேல் அந்தப் பகுதியில் செல்லும் உக்ரேனியக் கப்பல்கள் குறிவைக்கப்படும் என்று மொஸ்கோ தெரிவித்துள்ளது. உக்ரேனின் மேற்கத்தியப் பங்காளித்துவ நாடுகள், ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

உலகின் ஆக ஏழ்மையான மக்களை இந்நிலவரம் பாதிக்கும், உக்ரேனிய தானியங்களை அவர்களுக்குக் கொடுக்கும் வாய்ப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) பறித்துக்கொண்டதாக ஜெர்மானிய வெளியுறவு அமைச்சர் கூறினார்.

உணவுப் பாதுகாப்பில் ரஷ்யா பொறுப்பின்றிச் செயல்படுவதாக பிரெஞ்சு வெளியுறவு அமைச்சும் குறைகூறியது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!