சொற்ப காலத்தில் இலங்கைக்கு வந்த 75 ஆயிரம் சுற்றுலா பயணிகள்!

மார்ச் மாதத்தின் கடந்த 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 76 ஆயிரத்து 247 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகளின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 86 ஆயிரத்து 431 பேர் என குறிப்பிடப்படுகின்றது.
அதில், 16 ஆயிரத்து 588 பேர் ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் என்பதுடன், ஏனையவர்கள் இந்தியா, ஜேர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இலங்கை வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)