இலங்கையில் கைப்பேசியால் விபரீதம் – பாடசாலை மாணவியின் அதிர்ச்சி முடிவு

பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஹிரலு நிகவெவ பிரதேசத்தில் வசிக்கும் மாணவியே உயிரிழந்துள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட மாணவி 15 வயதுடைய கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்பவராவார்.
குறித்த மாணவி பாடசாலைக்கு அவரது தந்தையாரின் கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு சென்றபோது அதிபரிடம் அகப்பட்டுள்ளார்.
இதனால் மாணவி மனவேதனை அடைந்துள்ளார். இந்த நிலையில், இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)