இலங்கை

இலங்கையில் கைப்பேசியால் விபரீதம் – பாடசாலை மாணவியின் அதிர்ச்சி முடிவு

பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஹிரலு நிகவெவ பிரதேசத்தில் வசிக்கும் மாணவியே உயிரிழந்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட மாணவி 15 வயதுடைய கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்பவராவார்.

குறித்த மாணவி பாடசாலைக்கு அவரது தந்தையாரின் கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு சென்றபோது அதிபரிடம் அகப்பட்டுள்ளார்.

இதனால் மாணவி மனவேதனை அடைந்துள்ளார். இந்த நிலையில், இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!