இலங்கை செய்தி

ராஜபக்சகளுக்கு வழங்கப்பட்டுள்ள பதவிகள்; நாமல் பதிவிட்டுள்ள ட்வீட்!

சர்வதேச உறவுகள் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவராக சமல் ராஜபக்ஷவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது நாடாளுமன்றத்தில் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டமை பெருமைக்குரியதாகும்.

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் பொது நிர்வாகம், தணிக்கை நிறுவனங்கள் குறியீடு பண விதிமுறைகள், பொது நிதி, பொது வருவாய் மேலாண்மை ஆகியவற்றில் ஏறக்குறைய இருபத்தைந்து வருட அனுபவமுள்ள ஒரு தொழில்முறை.

இதேவேளை எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் குழுவின் தலைவராக நாலக பண்டார கோட்டேகொடவும், பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான துறைசார் குழுவின் தலைவராக புத்திக பத்திரனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)
See also  நடுவானில் சிறிலங்கன் எயார்லைன்ஸில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் : பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள விமானி
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content