மீண்டும் களமிறங்குவாரா ரணில்?
“நாடு படுமோசமான நிலையில் உள்ளது. எனவே, இந்த அரசாங்கம் வீழ்ந்த பிறகு நாட்டை மீட்பதற்கு நாம் தயாராகிவருகின்றோம்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர், முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“நாடு படுமோசமான நிலையில் உள்ளது. அரச இயந்திரம் ஸ்தம்பித்துள்ளது. தனியார்துறையின் கதையும் முடிந்துள்ளது. அதாவது நாடு வீழ்ந்துள்ளது. இதனை மக்கள் புரிந்துகொள்ள இடமளிக்க வேண்டும்.
நாட்டை எப்படி மீட்க வேண்டும் என்பது பற்றி ஆராய்ந்து, அதற்கு நாம் தயாராகிவருகின்றோம்.
ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள். எனவே, அவரை மீண்டும் கொண்டுவர வேண்டுமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.” என்றார் வஜிர அபேவர்தன.





