ஹங்கேரியில் கோர விபத்து – எழுவர் பலி!
ஹங்கேரியில், கியோர் அருகே உள்ள M1 நெடுஞ்சாலையில் சிறிய ரக பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் ஏழு பேர் உயிரழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் கட்டுமான நடவடிக்கையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த அனைவரும் வெளிநாட்டினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹங்கேரியப் பிரதமர் பீட்டர் மாக்யார் (Peter Magyar ) உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.




