செய்தி விளையாட்டு

சிங்கப் பெண்களுக்கான களம்: சமர் இன்று ஆரம்பம்!

ICC மகளிர் உலகக்கிண்ண T – 20 தொடர் இன்று இங்கிலாந்தில் கோலாகலமாக ஆரம்பமாகின்றது.

முதல் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு இப்போட்டி பெர்மிங்காமில் உள்ள எக்பாஸ்டன் மைதானத்தில் ஆரம்பமாகும்.

மகளிர் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகின்றது.

இதுவரை 9 முறை நடந்துள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 6 முறை ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கடைசியாக 2024-ஆம் ஆண்டு நடந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் 10-ஆவது மகளிர் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.

இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெறுகிறது.

மொத்தம் 12 அணிகள் 2 பிரிவுகளாக விளையாட உள்ளன.
இதில், இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குள் நுழையும்.

அரையிறுதி சுற்றில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதுகின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி