“அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இது” – டவுனிங் தெரு வலியுறுத்தல்!
பெல்ஃபாஸ்ட் (Belfast) நகரில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்த நிலையில், “அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இது” என டவுனிங் தெரு தெரிவித்துள்ளது.
மேற்படி வன்முறை சம்பவத்தினால் பேருந்து ஒன்று எரிக்கப்பட்டுள்ளதுடன், பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அத்துடன் குடியிருப்புவாசிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை அரசியல் தலைவர்கள் பலர் கண்டித்துள்ளனர்.
இதற்கமைய வட அயர்லாந்தின் முதல் அமைச்சர் மிஷேல் ஓ’நீல் மற்றும் செயலாளர் ஹிலாரி பென் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த “வன்முறையைக்” கண்டித்து அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
அதே நேரத்தில், தீவிர வலதுசாரிகளின் கிளர்ச்சிக்கு எதிராக காவல்துறை எச்சரித்துள்ளது.




