இலங்கை செய்தி

இலங்கையில் அடை மழை: 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!

இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் வவுனியா உட்பட 8 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடை மழை, கடும் காற்று மற்றும் வெள்ளம் காரணமாக 4 ஆயிரத்து 291 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

4 வீடுகள் முழுமையாகவும், 973 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

ஒருவர் உயிரிழந்துள்ளார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், இன்று காலை ஆட்டோமீது மரமொன்று முறிந்து விழுந்ததில் மூவர் பலியாகியுள்ளனர்.

மலையகத்தில் பல பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்துவருகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!