உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா மோதல் தீவிரம்

தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகளுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

கிழக்கு லெபனானின் ஸூதார் நகர புறநகர்ப் பகுதிகளில், இஸ்ரேலிய இராணுவத்தின் மெர்காவா டாங்கிகளை வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

அதேவேளை, தெற்கு லெபனானின் ட்பெய்ன் நகர புறநகர்ப் பகுதிகளுக்குள் நுழைய முயன்ற இஸ்ரேலியப் படைகளை குறிவைத்து ஹிஸ்புல்லா வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியதுடன், இரு தரப்பினருக்கும் இடையே நேரடி மோதலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், தெற்கு லெபனானின் முக்கிய பொருளாதார மற்றும் கலாச்சார மையமாக விளங்கும் நபாத்தியா நகரின் புறநகர்ப் பகுதிகளிலும் இஸ்ரேலியப் படைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரலாற்று ரீதியாக இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்துள்ள நபாத்தியா, பல லெபனானியர்களால் எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!