இங்கிலாந்தில் வெப்ப உயர்வால் அதிகரிக்கும் மரணங்கள்! சிறுவன் உயிரிழப்பு!
இங்கிலாந்தில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக நீர் நிலைகளில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இந்த மரணம் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படவில்லை என்றும், இதுகுறித்த அறிக்கை அரசு வழக்கறிஞருக்கு அனுப்பப்படும் என்றும் ஸ்காட்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகமை, கிழக்கு மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்து மற்றும் லண்டன் ஆகிய பகுதிகளுக்கு வெப்பநிலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்நிலைமையானது நீர் தொடர்பான மரணங்கள் அதிகரிக்க ஏதுவாக அமைந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




