பிரித்தானியாவில் கடும் வெப்ப அலைக்கு மத்தியில் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை!
பிரித்தானியாவின் சில பகுதிகளில் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சமையல், குளியல் மற்றும் கழிப்பறைகளைப் பயன்படுத்துதல் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு நீர் இன்றி மக்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக விட்ஸ்டபிள் மற்றும் ஹெர்ன் பே (Herne Bay) உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
உணவகங்கள் மற்றும் கஃபே போன்ற வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இது குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளுக்கும், உள்ளூர் பொருளாதாரம் குறித்த கவலைகளுக்கும் வழிவகுத்துள்ளது.
கடும் வெப்பம் காரணமாக ஏற்பட்ட அதிக தேவையே இந்தத் தடைகளுக்குக் காரணம் என்று சவுத் ஈஸ்ட் வாட்டர் நிறுவனம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




