இலங்கை செய்தி

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி விஷமருந்தி தற்கொலை முயற்சி: நுவரெலியாவில் பரபரப்பு!

நுவரெலியா மேல் நீதிமன்றத்தால், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி, விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் இன்று (29.05.2026) நண்பகல் 12.30 மணியளவில், HC/NE/17/2020 என்ற இலக்கமுடைய கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கை விசாரித்த மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய, சந்தேக நபரான உடபுஸ்ஸல்லாவ, தொடம்வத்த பகுதியைச் சேர்ந்த 44 வயது நபர் குற்றம் புரிந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்திய பின், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸாரால் அவர் நீதிமன்றத்தில் உள்ள தற்காலிக சிறைக்கூட்டிற்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, அவர் தன்வசம் மறைத்து வைத்திருந்த விஷத்தை திடீரென எடுத்து அருந்தி, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைத் அவதானித்த நீதிமன்றப் பாதுகாப்புப் பிரிவினரும் அங்கிருந்தவர்களும், உடனடியாகச் செயற்பட்டு அவரை மீட்டு, சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இக்குற்றவாளியின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த நபர் இந்த வழக்கு விசாரணைகளின் போது பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இன்று தீர்ப்புக்காகத் தனது வீட்டில் இருந்து நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.

இதன்போது, விஷ போத்தல் ஒன்றை மறைத்து எடுத்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!