‘அமைதி முயற்சி’ – பாகிஸ்தான், மலேசியாவுக்கு ஈரான் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!
போர் சூழ்நிலைக்கு மத்தியிலும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அண்டை நாடுகளுடனான இராஜதந்திர உறவை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்டிவருகின்றார்.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர மலேசியா மற்றும் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியை நிலைநாட்ட ஈரான் உறுதியாக இருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அனைத்து துறைகளிலும் முஸ்லீம் நாடுகளுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே ஈரானின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையாக உள்ளது.
தனது சமூக வலைதளப் பதிவின் மூலம், உலக நாடுகளுடன் இணக்கமான உறவைப் பேணுவதற்கான ஈரானின் விருப்பத்தை அந்நாட்டு ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.





