இலங்கை செய்தி

வடக்கில் விரைவில் காணி விடுவிப்பு?

வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் பொதுமக்களின் பல ஏக்கர் காணிகளை மிக விரைவில் விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

படையினர் வசமுள்ள நிலங்களின் தற்போதைய நிலைவரங்கள் குறித்து, பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை வட பகுதிக்கு நேரில் வருகை தந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விஜயத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக விடுவிக்கப்படவுள்ள முக்கிய நிலப்பரப்புகள் குறித்த விவரங்கள் வருமாறு:-

பாதுகாப்புப் படையினரின் இன்றைய நேரடிப் பார்வையின் அடிப்படையில், யாழ். குடாநாட்டில் பல முக்கிய விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் விடுவிக்கப்படவுள்ளன என்று தெரியவருகின்றது.

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தின் எல்லையை ஒட்டிய இயக்கச்சிப் பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள 20 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படவுள்ளது.

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலையமைப்புக்குள் உள்ள பலாலி வீதியின் கிழக்குத் திசையில் அமைந்துள்ள மற்றுமொரு 20 ஏக்கர் காணி விடுவிப்பதற்குக் குறிவைக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை பகுதியில் படையினர் தங்களின் விடுதியாகப் பயன்படுத்தி வரும் பிரதான கட்டடத்துக்கு மிக அருகில் அமைந்துள்ள வரலாற்றுப் பழமைவாய்ந்த தென்னந் தோட்டக் காணியும் முழுமையாக விடுவிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு மேலதிகமாக, மன்னார் மாவட்டத்திலும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மன்னார் – முள்ளிக்குளம் கடற்படைத் தளப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து, ஒரு குறிப்பிட்ட தொகுதி நிலங்கள் மிக விரைவில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாதுகாப்புத் தரப்பின் இந்த உயர் மட்டக் களவிஜயத்தைத் தொடர்ந்து, உத்தியோகபூர்வமாக நிலங்களை மக்களிடம் ஒப்படைக்கும் திகதிகள் மற்றும் அதற்கான வரைபடங்கள் தயாரிக்கும் பணிகள் மாவட்டச் செயலகங்கள் ஊடாக முடுக்கிவிடப்படவுள்ளன என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மின்னிதழொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!