இலங்கை செய்தி

மூளைக்காய்ச்சல் பரவல் – புதிய வழிகாட்டல்கள் வெளியீடு

பாடசாலைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் மூளைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல்
பிரிவு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து சுகாதாரத் துறைகள் வைத்தியசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அறிக்கையின்படி, நோயை கண்டறிதல், தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ நடைமுறைகள், மாதிரி பரிசோதனைகள் மற்றும் பாடசாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

கைகளை அடிக்கடி கழுவுதல், இருமல் அல்லது தும்மல் ஏற்படும் போது அவதானமாக இருத்தல், நோயாளர்களுடன் நெருங்கிய தொடர்பை தவிர்த்தல், வீடுகளில் காற்றோட்டத்தை உறுதி செய்தல் போன்ற நடைமுறைகள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாடசாலை மாணவர்கள் மத்தியில் நோய் பரவல் அதிகமாக காணப்படுவதாகவும், காய்ச்சல், தலைவலி, வாந்தி ஆகியவை முக்கிய அறிகுறிகளாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்த நோய் 7 நாட்களுக்குள் குணமடைவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!