நியூயார்க்கில் கப்பல் கட்டும் தளத்தில் வெடிப்பு சம்பவம் பதிவு!! 34 பேர் காயம்!
நியூயார்க் நகர கப்பல் கட்டும் தளத்தில் நேற்று வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
நியூயார்க் தீயணைப்புத் துறை (FDNY), அபாயகரமான பொருட்கள் பிரிவு (Hazmat), மற்றும் நியூயார்க் நகர காவல்துறை (NYPD) உள்ளிட்ட பல்வேறு முகமைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட முதன்மை மீட்புப் பணியாளர்கள் களப்பணியாற்றியுள்ளனர்.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான காயங்களுடன் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani), உயிரிழந்தவருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, தீயணைப்பு வீரர்களின் சேவையை பாராட்டியுள்ளார்.
மேலும் மேற்படி வெடிப்புக்கான காரணத்தை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




