கடும் வெப்பநிலை – டெல்லியில் குளிரூட்டும் மண்டலங்கள் திறப்பு!!
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் நேற்றைய தினம் 45 டிகிரி செல்சியஸ் (113 ஃபாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடுமையான வெப்பநிலை காரணமாக மக்கள் வெளிப்புற செயற்பாடுகளை தவிர்த்துள்ளனர்.
அதேநேரம் அங்கு, மக்கள் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள உதவும் வகையில் அதிகாரிகள் தற்காலிக “குளிரூட்டும் மண்டலங்களை” திறந்துள்ளனர்.
வரும் நாட்களில் வட பிராந்தியங்களில் இந்த வெப்ப உயர்வு நீடிக்கக்கூடும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறும், வெப்பம் தொடர்பான நோய்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.





