அழுத்தங்களுக்கு அடிபணியோம்: ஈரான் ஜனாதிபதி கர்ஜனை!
அமெரிக்காவுடனான மோதல்களைத் தவிர்க்க ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian தெரிவித்துள்ளார்.
ஈரானை வற்புறுத்தல் மூலம் பணிய வைப்பது சாத்தியமற்றது என்று கூறிய அவர், அமைதிக்கான வழிகள் இன்னும் திறந்தே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், ஈரான் முன்மொழிந்த 14 அம்சத் திட்டத்தின் அடிப்படையில் டிரம்ப் நிர்வாகத்துடன் தகவல்கள் பரிமாறப்பட்டு வருவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த ஈரானியக் கப்பல்கள் மீதான தடைகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.




