துருக்கியில் நபர் ஒருவரின் அட்டகாசம் – 06 பேர் கொலை! பொலிஸார் வலைவீச்சு!!
துருக்கியில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் மேற்கொண்ட தொடர் தாக்குதல்களில் 06 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது.
குறித்த நபர் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை ஏந்தி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் மேலும் 08 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்தாரி மெர்சின் மாகாணத்தில் உள்ள டார்சஸ் நகரின் பல இடங்களில் தாக்குதல் நடத்தியப் பின்னர் தலைமறைவாகியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ட்ரோன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவரை தேடி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் ( Recep Tayyip Erdogan) உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்படத்தக்கது.





