விநியோகச் சங்கிலியில் சிக்கல் – எரிபொருள் கையிருப்பு தொடர்பில் எச்சரிக்கை!
உலக நாடுகளில் எண்ணெய் கையிருப்பு “மிக வேகமாக” குறைந்து வருவதாக சர்வதேச எரிசக்தி முகமையின் (IAE) தலைவர் இன்று கூறியுள்ளார்.
மத்தியக் கிழக்கு நாடுகளில் நிலவிவரும் பதற்றம் எரிபொருள் விநியோகத்தில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
கோடைகால பயணப் பருவம் நெருங்கி வருகின்ற நிலையில் பற்றாக்குறை பற்றிய அச்சம் எழுந்துள்ளது.
விநியோகத் தடைகள் தொடர்ந்தால், சில வாரங்களில் ஜெட் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று விமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
இதற்கிடையே எரிபொருள் பற்றாக்குறை காரணமாக உலக நாடுகளில் அதன் விலை உச்சம் தொட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள அதேவேளை போராட்டங்களுக்கும் வழிவகுத்துள்ளது.




