காலத்தின் தேவையை உணர்ந்த ஸ்டாமர் : அவசர மாற்றம் தேவை!!
நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் ஸ்டாமரின் தொழிலாளர் கட்சி தோல்வியை தழுவியதை தொடர்ந்து அவசரமான மாற்றங்கள் தேவை என்பதை அவர் உணர்வதாக தெரிவித்துள்ளார்.
வரும் மாதங்களில் தொழிற்கட்சியில பரவலான தலைமைத்துவ போட்டி எழுந்துள்ளதுடன், கட்சி பிளவுப்பட்டுள்ள சூழ்நிலையில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொழிலாளர் கட்சி சகாக்களிடம் கருத்து வெளியிட்ட அவர், தேர்தல் முடிவுகள் மக்கள் விரக்தியடைந்துள்ளனர் என்பதையும், தங்கள் வாழ்க்கையில் போதுமான வேகத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்று அவர்கள் உணர்கிறார்கள் என்பதையும் நமக்குச் சொல்கின்றன.
“நாம் செய்யும் செயல்களின் அவசரத்தை அதிகரிக்க வேண்டும். அதில் நமக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை தேவை. மேலும், நாம் எதற்காக இங்கு இருக்கிறோம் என்பதை எல்லா நேரங்களிலும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த நாட்டின் மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே நாம் அரசாங்கத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.





