17 ஆவது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நாளை
17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று கூடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதன்மைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
இதன்படி, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் காலை 9.30 க்கு முதல் கூட்டத் தொடர் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்கவுள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழுடன் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சட்டப் பேரவை உறுப்பினராக பதவியேற்குமாறு அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





