ஐரோப்பா

லண்டனில் துப்பாக்கிச்சூடு – உயிருக்கு போராடும் இளைஞர்!

லண்டனின் பிரிக்ஸ்டனில் நேற்று இடம்பெற்ற   துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன்  மேலும் மூவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோல்ட்ஹார்பர் (Coldharbour) லேனில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்தில் முதலுதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காணும் பணியில் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!