உக்ரைனின் முக்கிய கோட்டையை கைப்பற்ற முழுவீச்சில் பணியாற்றும் ரஷ்யா!
உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கோஸ்டியாண்டினிவ்கா (Kostiantynivka) நகருக்கு அருகே ரஷ்யப் படைகள் காலூன்ற முயற்சித்து வருகின்றன.
இந்த நகரம், பலமாக அரணமைக்கப்பட்ட ‘கோட்டைப் பட்டை’யின் ஒரு பகுதியாக விளங்குகிறது.
தொடர்ந்து வரும் ரஷ்ய ஊடுருவல் முயற்சிகளை உக்ரைனியப் படைகள் முறியடித்து வருவதாகவும், நகருக்குள் எதிர் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் உக்ரைன் இராணுவத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி (Oleksandr Syrskyi) தெரிவித்தார்.
போர்க்கள வரைபடத்தின்படி, ரஷ்யப் படைகள் கோஸ்டியாண்டினிவ்காவின் தெற்குப் புறநகர்ப் பகுதியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளன.
ஏப்ரல் மாதத்தில் ரஷ்யாவின் தாக்குதல் முயற்சிகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், திங்கட்கிழமை முதல் இப்பகுதியில் சிறிய காலாட்படைக் குழுக்களால் 83 தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிர்ஸ்கி குறிப்பிட்டார்.





