அறிவியல் & தொழில்நுட்பம்

விமான நிலையத்தில் பணியாளர்களின் பற்றாக்குறையை ஈடு செய்யும் ரோபோக்கள்!

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் (Tokyo’s Haneda airport) தரைவழிப் பணிகளுக்காக மனித உருவ ரோபோக்களை பயன்படுத்தவுள்ளதாக  ஜப்பான் ஏர்லைன்ஸ் (JAL) அறிவித்துள்ளது.

ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில், இரண்டு வருட சோதனை முயற்சியாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டம் வரும் மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோக்கள் சரக்குக் கொள்கலன்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்வரும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் வேலை செய்யும் வயதுடைய மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் இந்த மனித ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில், இந்த ரோபோக்களை விமானத்தின் உட்புறத்தைச் சுத்தம் செய்வதற்கும், தரைவழி ஆதரவு உபகரணங்களை இயக்குவதற்கும் பயன்படுத்தலாம் என்று அந்நிறுவனம் நம்புகிறது.

பாதுகாப்பு ரோந்து மற்றும் சில்லறை விற்பனை உட்பட, ஜப்பான் முழுவதும் உள்ள சில விமான நிலையங்களில் ரோபோக்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!