பிரித்தானியாவில் தீவிபத்தில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – பெண் ஒருவர் கைது!
பிரித்தானியாவின் வோல்வர்ஹாம்டனில் (Wolverhampton) உள்ள குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 02 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பத்தில் குழந்தைகள் இருவரும்
இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இரண்டு குழந்தைகளின் இறப்பிற்குக் காரணமாக இருந்ததாக அல்லது அதற்கு அனுமதித்ததாகச் சந்தேகத்தின் பேரில், 30 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தீ விபத்துக்கான சரியான சூழ்நிலைகளைக் கண்டறிய, மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறையும் தீயணைப்புத் துறையும் இணைந்து ஒரு கூட்டு விசாரணையை நடத்தி வருகின்றன.
சம்பவ இடத்தில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு, அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று விசாரணை நடத்தி வருவதுடன், சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.





