யூரோ மண்டலத்தில் முன்னேறிய கிரீஸ் – இத்தாலிக்கு பின்னடைவு!
கிரீஸின் கடன் சுமை இந்த ஆண்டின் இறுதிக்குள் குறைவடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
அந்நாடானது கடன் சுமையில் இருந்து விடுப்பட்டு யூரோ மண்டலத்தில் அதிகக் கடன் சுமை கொண்ட நாடு என்ற பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
2025-ல் 145.9% ஆக இருந்த கிரீஸின் கடன், இந்த ஆண்டு சுமார் 137% ஆகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மாறாக, இத்தாலி தனது கடன் சுமையை 137.1 சதவீதத்தில் இருந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் 138.6 வீதமாக உயர்த்தும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
கிரீஸின் பொருளாதாரம் சீராக வளர்ந்து வரும் வேளையில், இத்தாலியின் பொருளாதாரம் மீண்டும் யூரோ மண்டலத்தின் மிகவும் மந்தமான செயல்திறன் கொண்ட நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.





