ஐரோப்பா செய்தி

மண்டேல்சனை நியமித்தது தவறு – மன்னிப்பு கோரிய பிரதமர்

மண்டேல்சனை நியமித்தது தவறு என்பதை House of Commons இல் பிரதமர் Starmer ஒப்புக்கொண்டார்.

மேலும், தனது முடிவின் விளைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பாலியல் குற்றவாளியான Jeffrey Epstein இனால் பாதிக்கப்பட்டவர்களிடம் மீண்டும் மன்னிப்பு கோரினார்.

பீட்டர் மண்டேல்சனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு சரிபார்ப்பு அனுமதி குறித்த முக்கிய தகவல் தாமதமாகவே கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு சரிபார்ப்பு முகமையின் பரிந்துரைக்கு எதிராக, 2025 ஜனவரி 29 அன்று வெளியுறவு அலுவலக அதிகாரிகள் மண்டேல்சனுக்கு மேம்படுத்தப்பட்ட அனுமதி வழங்கியதை ஏப்ரல் 14 ஆம் திகதியே தான் முதன்முறையாக அறிந்ததாக அவர் கூறினார்.

அந்த முகமை, இந்த மேம்படுத்தப்பட்ட அனுமதியை வழங்கக்கூடாது என்றே பரிந்துரைத்திருந்ததாகவும் ஸ்டார்மர் தெரிவித்தார்.

இந்த முடிவு எவ்வாறு எடுக்கப்பட்டது, யார் எடுத்தார்கள், எப்போது யாருக்கு என்ன தகவல் இருந்தது என்பதனை முழுமையாக விசாரிக்க அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!