எந்த சமரசமும் செய்ய மாட்டோம் – ஈரான் திட்டவட்டம்!
அமெரிக்காவின் புதிய முன்மொழிவுகளை பரிசீலித்து வரும் அதேவேளை பேச்சுவார்த்தைகளில் சமரசம் இல்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திர வழிமுறை இருந்தபோதிலும், தனது நிலைப்பாடு உறுதியாக இருப்பதாக ஈரான் வலியுறுத்தியுள்ளது.
தனது பேச்சுவார்த்தைக் குழு “சிறிதளவு சமரசம், பின்வாங்கல் அல்லது மென்மை காட்டாது என்றும், தேசத்தின் நலன்களைத் தனது முழு பலத்துடன் பாதுகாக்கும்” என்றும் வலியுறுத்தியுள்ளது.





