உலகம் ஒரு சில கொடுங்கோலர்களால் சூறையாடப்படுகிறது!
பாப்பரசர் போப் லியோ, போர்களுக்காக அதிகளவில் செலவிடும் உலகத் தலைவர்களை கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
கேமரூனில் ஆற்றிய உரையின்போது, உலகம் “ஒரு சில கொடுங்கோலர்களால் சூறையாடப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மோதல்களை நியாயப்படுத்த மத ரீதியான மொழியைப் பயன்படுத்தும் தலைவர்களை அவர் கண்டித்ததோடு, மோதலால் பாதிக்கப்பட்ட பிராந்தியத்தில் “தீர்மானமான கொள்கை மாற்றத்திற்கு” அழைப்பு விடுத்தார்.
மருத்துவம், கல்வி மற்றும் மறுசீரமைப்புக்கான வளங்களோடு ஒப்பிடுகையில், கொலை மற்றும் பேரழிவுகளுக்காக” பெரும் தொகை பணம் செலவழிக்கப்படுவதையும் போப்பாண்டவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், போப் லியோ மீது சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளதை தொடர்ந்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன.





