மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெற்றார் அநுர!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை மல்வத்து மகா விகாரைக்குச் சென்று மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
இதன்போது மகாநாயக்க தேரர், செத்பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு சிங்கள தமிழ் புத்தாண்டிற்கு தனது ஆசீர்வாதங்களை வழங்கினார்.
சுகாதார மற்றும் வெகுஜனஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அதன்பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரரைச் சந்தித்து, சிறிது நேரம் உரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் செத்பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்குத் தனது ஆசீர்வாதங்களை வழங்கினார்.





