விபத்தில் கணவன் பலி: மனைவி படுகாயம்! திருமலையில் சோகம்!!
திருகோணமலை, நாமல்வத்தை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் பலியாகியுள்ளார். மனைவி படுகாயம் அடைந்துள்ளார்.
இவ்விபத்து இன்று (11) மாலை இடம்பெற்றுள்ளது.
மொரவெவ பகுதியில் இருந்து பயணித்த முச்சக்கர வண்டி, நாமல்வத்த பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலை நாமல்வத்தை பகுதியைச் சேர்ந்த ஆர்.ஜீ. சுனில் ரத்ன பண்டார (50வயது) என்பவர் உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த மனைவி கே யூ. அனுஷ்கா (46 வயது) படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதியான 34 வயதான இராணுவ சிப்பாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.





