பிரித்தானியாவில் M1 நெடுஞ்சாலையில் கோர விபத்து – இருவர் பலி!
பிரித்தானியாவில் பாலத்தின் மேல் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று சாலையை விட்டு விலகி கீழே சென்றுகொண்டிருந்த ஒரு மினிபஸ் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து M1 நெடுஞ்சாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதில் இரண்டு பதின்ம வயது இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பேருந்தில் பயணித்த நால்வர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்த சாட்சிகள் அல்லது டேஷ்கேம் காணொளிப் பதிவுகளைக் கொண்ட எவரும் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு லெஸ்டர்ஷையர் (Leicestershire) காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.





