முழு ஈரானையும் ஒழித்துக்கட்டுவோம் – ஹார்மூஸை நேரடியாக கட்டுப்படுத்துமா அமெரிக்கா?
ஈரான் ஹார்முஸ் நீரிணையில் தனது கட்டுப்பாட்டை தளர்த்தாவிட்டால், “முழு ஈரானையும் ஒழித்துக்கட்டுவோம்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தி வருகிறார்
அதேவேளை, அந்த முக்கிய நீர்வழி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா சுங்கக் கட்டணம் விதிக்கும் திட்டத்தையும் பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் LNG போக்குவரத்து பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணை வழியாக தினமும் சுமார் 120 கப்பல்கள் பயணிக்கின்றன. சில தகவல்களின் படி, தெஹ்ரான் ஏற்கனவே சில கப்பல்களிடமிருந்து அதிக கட்டணங்களை வசூலித்து வருவதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா இதேபோன்ற கட்டணத்தை விதித்தால், தினசரி கோடிக்கணக்கான வருவாய் கிடைக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ட்ரம்ப், ஈரானுக்கு “இறுதி எச்சரிக்கை” விடுத்து, ஹார்முஸ் வழியை திறக்கவும், அமெரிக்க நிபந்தனைகளை ஏற்கவும் வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில், ஈரானின் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்தார்.
இதற்கு பதிலாக, ஈரான் அதிகாரிகள், ஹார்முஸ் நிலைமை இனி பழைய நிலைக்கு திரும்பாது என தெரிவித்துள்ளனர்.
மேலும், போருக்குப் பிறகு புதிய நிர்வாக முறைமை ஒன்றை உருவாக்க வேண்டுமெனவும் அவர்கள் கூறியுள்ளனர்.





