இலங்கை செய்தி

‘மாவா’போதைப்பாக்கு விற்பனை நிலையம் சுற்றிவளைப்பு: வவுனியாவில் 6 பேர் கைது!

வவுனியா, குடியிருப்பு பூந்தோட்டம் வீதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த ‘மாவா’ போதைப்பாக்கு விற்பனை நிலையமொன்றை வவுனியா பொலிஸார் இன்று அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர்.

இந்தச் சோதனை நடவடிக்கையின் போது கடையின் உரிமையாளர் மற்றும் மாணவர்கள் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தடைசெய்யப்பட்ட ‘மாவா’ பாக்கு விற்பனை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

இதனைத் தொடர்ந்து, வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இந்த விசேட முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

முற்றுகையின் போது கடையை நடத்திச் சென்ற ஒருவரைப் பொலிஸார் கைது செய்ததுடன், அங்கு ‘மாவா’ பாக்கினை கொள்வனவு செய்வதற்காகச் சென்றிருந்த மாணவர்கள் உட்பட ஐந்து பேரையும் கைது செய்தனர்.

அங்கிருந்து பெருமளவிலான மாவா பாக்குகள், றோஸ்பவுடர், பொமலைன்ட் உள்ளிட்ட போதைப்பொருள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அறுவரும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்கள் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தப் பொலிஸார் இவ்வாறான அதிரடிச் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!