ஹங்கேரி பொதுத் தேர்தல் – ஆளும் கட்சிக்கு பின்னடைவு!
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான ஹங்கேரி, ஏப்ரல் 12 அன்று பொதுத் தேர்தலை நடத்தவுள்ளது.
2010-ல் தேசியவாதப் பிரதமர் விக்டர் ஓர்பன் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.
சுயேச்சையான கருத்துக் கணிப்பாளர்களின் ஆய்வுகள், எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் மாக்யாரின் (Peter Magyar’) பழமைவாத TISZA கட்சி மாபெரும் வெற்றியை நோக்கிச் செல்லக்கூடும் என்று தெரிவிக்கின்றன.
அதேநேரம் பிரதமர் விக்டர் ஓர்பன் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படுவதாக கூறப்படுகிறது.
இருப்பினும், அரசாங்க ஆதரவு நிறுவனங்கள் ஓர்பனின் ஃபிடெஸ்-கேடிஎன்பி (Fidesz-KDNP) கூட்டணி வெற்றி பெறும் என்று கணிக்கின்றன.
இதேவேளை சுமார் 75 முதல் 80 சதவீதம் வரை சாதனை அளவிலான வாக்குப்பதிவு இருக்கும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.





