லண்டனில் 14 வயதுடைய சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு!
லண்டனின் வூல்விச்சில் (Woolwich) 14 வயதுடைய சிறுவன் ஒருவர் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் பதின்ம வயதுடைய மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், சாட்சிகள், சிசிடிவி அல்லது டாஷ்கேம் காணொளிகள் இருந்தால் வழங்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.





