இந்திய நண்பர்களுக்கு பாதுகாப்பு: ஈரான் உறுதி!
“இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கரங்களில் உள்ளனர், கவலை வேண்டாம்” என ஈரான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடி உள்ளது.
இதனால் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு எரிசக்தி விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில்,
“எங்களது இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கரங்களில் உள்ளனர், கவலை வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதி என ஈரான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





