உலகம் செய்தி

ஈரானில் 18 வயது இளைஞனுக்கு மரண தண்டனை: மனித உரிமை அமைப்புகள் கொதிப்பு!

ஈரானில் நடந்த போராட்டத்தின்போது இராணுவத் தளத்தைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 18 வயது இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

குறித்த இளைஞன் எந்தவொரு ஆயுதத்தையும் பயன்படுத்தவில்லை எனவும், தவறான உள்நோக்கத்திலேயே தண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை மிகவும் விரைவாகவும் வெளிப்படைத்தன்மையின்றியும் நடத்தப்பட்டுள்ளது. அவருக்குச் சுதந்திரமான சட்ட உதவியும் மறுக்கப்பட்டுள்ளது.

கைதாகி ஒரு மாத காலத்திற்குள்ளேயே வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பானது, மனித உரிமைகளையும் சட்ட நெறிமுறைகளையும் மீறும் செயல் என விமர்சிக்கப்படுகிறது.

கட்டாயப்படுத்திப் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தண்டனை வழங்கப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!