தொடரும் போர்: உயிரிழப்புகள் அதிகரிப்பு!
மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் இன்று 35 ஆவது நாளாக தொடர்கின்றது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான்மீது போர் தொடுத்தன. ஈரானும் பதிலடி கொடுத்துவருகின்றது.
இப்போரால் எரிபொருள் நெருக்கடி மட்டுமல்ல உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல், அமெரிக்க தாக்குதல்களில் ஈரானில் 600-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன.
ஈரான் மற்றும் லெபனானிலேயே அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. லேபனானில் மாத்திரம் 1,345 பேர் பலியாகியுள்ளனர்.
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலில் 28 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 12 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரானில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.





