ஜெருசலேமில் தாக்குதல் சத்தம் – கட்டார், குவைட் ட்ரோன்கள் இடைமறிப்பு
இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல்களின் சத்தம் ஜெருசலேமில் கேட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
இதனிடையே, ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், கட்டார் தனது வான்வெளிக்குள் நுழைந்த அனைத்து ஆளில்லா விமானங்களையும் இடைமறித்ததாக அதன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று, கடந்த 24 மணித்தியாலங்களில் இரண்டு ஏவுகணைகளையும் 13 ட்ரோன்களையும் இடைமறித்ததாக குவைட் பாதுகாப்பு அமைச்சகமும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.




