யாழ். இந்துக் கல்லூரியில் 64 மாணவர்கள் 3 A சித்தி!
வெளியாகியுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 64 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
கணிதப் பிரிவில் 42 மாணவர்கள் 3 ஏ சித்திகளையும், 16 மாணவர்கள் 2 ஏ, பி சித்திகளையும், 6 மாணவர்கள் ஏ, 2 பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.
உயிரியல் பிரிவில் 19 மாணவர்கள் 3 ஏ சித்திகளையும், 12 மாணவர்கள் 2 ஏ, பி சித்திகளையும், 8 மாணவர்கள் ஏ, 2 பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.
வர்த்தகப் பிரிவில் ஒரு மாணவன் 3 ஏ சித்திகளையும், ஒரு மாணவன் 2 ஏ, பி சித்திகளையும், 5 மாணவர்கள் ஏ, 2 பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.
கலைப் பிரிவில் 2 மாணவர்கள் 3 ஏ சித்திகளையும், 2 மாணவர்கள் 2 ஏ, பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.





