வளைகுடா நாடுகளுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குகிறது பிரிட்டன்!
ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதால் சவூதி அரேபியா, குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்குப் புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க உள்ளதாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி John Healey அறிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளுடனான பிரித்தானியாவின் உறுதியான பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில், கத்தாரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரித்தானிய போர் விமானங்கள் தொடர்ந்து அங்கு இயங்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
மத்திய கிழக்கின் பாதுகாப்பை உறுதி செய்யத் தனது நாடு கூட்டாளிகளுடன் எப்போதும் துணை நிற்கும் என்ற செய்தியை அவர் கத்தாரிலிருந்து பகிர்ந்துள்ளார்.
பிராந்தியத்தின் வான்பரப்பைப் பாதுகாக்கப் பிரித்தானியாவின் மிகச்சிறந்த இராணுவப் பிரிவுகள் தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.




