ஐரோப்பா செய்தி

போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் “போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது” என பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது

பற்றாக்குறை குறித்த தகவல்கள் தவறானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் உற்பத்தி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறுவதாகவும் பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

மேலும், பிரித்தானியா பல்வேறு மற்றும் நிலைத்தன்மை கொண்ட விநியோக அமைப்பை கொண்டிருப்பதால்,
விநியோகத்தில் சிக்கல் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மத்திய கிழக்கிலிருந்து மிகக் குறைந்த அளவு எரிபொருள் மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதால், தற்போதைய நிலைமையில் விநியோகத்தில் பாதிப்பு இல்லை என பிரதமரின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!