போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் “போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது” என பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது
பற்றாக்குறை குறித்த தகவல்கள் தவறானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் உற்பத்தி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறுவதாகவும் பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது.
மேலும், பிரித்தானியா பல்வேறு மற்றும் நிலைத்தன்மை கொண்ட விநியோக அமைப்பை கொண்டிருப்பதால்,
விநியோகத்தில் சிக்கல் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மத்திய கிழக்கிலிருந்து மிகக் குறைந்த அளவு எரிபொருள் மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதால், தற்போதைய நிலைமையில் விநியோகத்தில் பாதிப்பு இல்லை என பிரதமரின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.





