உச்சத்தில் பேருந்து கட்டணம்!
எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து, நேற்று (23) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்துக் கட்டணங்கள் 12.19 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை திருத்தத்தைத் தொடர்ந்து, குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 27 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இரண்டாயிரத்து 159 ரூபாயாக இருந்த அதிகபட்சக் கட்டணம் 263 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய கட்டணமாக இரண்டாயிரத்து 422 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று முதல் வழக்கம் போல் பேருந்துச் சேவைகள் மீண்டும் முன்னெடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.





